Saturday, May 12, 2012

கண்றாவிக் காதல் கதைகள் - 1

சென்னை வந்த புதிதில் திருவல்லிக்கேணியில் நான் தங்கியிருந்த ஆண்கள் மேன்சன் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது. பெண்களின் வாடை நுழையா பிரதேசம்.

காற்று வாங்க... வேடிக்கை பார்க்க என்கிற போர்வையில் அக்கம் பக்கத்து விட்டுப் பெண்களை சைட் அடிக்கவே ஒரு பெருங்கும்பல் வரிசையாக நின்றிருக்கும் மேன்சன் பால்கனியில்.


மேன்சனின் இரண்டாவது தளத்தில் ரஞ்ஜித் - எட்வர்ட் என்ற இருவர் ஒரே ரூமில் தங்கியிருந்தனர். ரஞ்ஜித் இருபது வயதேயான ஒரு மலையாளி. கெட்ட சகவாசத்தினாலும், விட்டிலிருந்தே பெரும் பணத்தை திருடியதாலும் பெற்றோரால் விட்டிலிரிந்து துரத்தப்பட்டவன்.  


அவனோடு தங்கி இருந்த எட்வர்ட்-கு அவனை விட பத்து வயது அதிகம். டான்ஸ் மாஸ்டர்.  சிலரின் வீடுகளுக்கே சென்று...அவர்களின் குழைந்தைகளுக்கு டான்ஸ் பயிற்சி அளித்து அதன் மூலம் வருமானம் ஈட்டுபவன். இவர்களுக்குள் எப்படிப் பழக்கமோ தெரியாது, ரஞ்ஜித் - கான தங்கும் செலவு, சாப்பாடு அனைத்தையுமே எட்வர்டே பார்த்துக் கொண்டான். இதற்க்கான காரணம் ஒரு நாள் நள்ளிரவின் போது ஆதாம் ஏவாளாக அவர்களை ஒரே கட்டிலில் பார்த்த போது தெரிந்தது.
வேட்டையாடு விளையாடு அமுதன், இளமாறன் போல.


எங்களின் மேன்சன் எதிரில் ஒரு மலையாளக் குடும்பம். அதில் அக்காள், தங்கை இருவர். அக்கா படிக்காமல் வீட்டில் இருக்க, தங்கை பள்ளியில் பத்தாம் வகுப்பு கொண்டிருந்த நேரம். பெரும்பாலான நேரத்தை டிவியில் சினிமா பார்த்து செலவிடுபவர்கள். அவர்களின் விட்டுப் பால்கனியும், எங்களின் மேன்சன் பால்கனியும் கைக்கெட்டும் தூரம். அக்காவும், தங்கையும் காலை மாலை நேரங்களில் பால்கனியின் ஒரு ஒரத்தில் இருந்த தண்ணிர் அடி குழாய்லிருந்து தண்ணிரை அடித்தமேனியிருப்பர்.


அவர்களை சைட் அடிக்க என்றே ஒரு குரூப் பால்கனியில் நின்றிருக்கும். ரஞ்ஜித் தங்கையை சைட் அடிக்கத் தொடங்கிருந்தான். கையை ஆட்டி அவளின் கவனத்தை ஈர்ப்பதையும், இங்கிருந்து சைகை மொழியில் பேசுவதையும் வழக்கமாக கொண்டிருந்த அவன் பிரிதொரு நாளில் திடிரென்று எதையோ பேப்பரில் எழுதி கசக்கி அவள் பால்கனியில் இருந்த நேரமாக பார்த்து பந்தாக விட்டெறிந்தான்.

மறுநாள் அவனே எதிர்பார்க்காத வண்ணம் அவள் கையில் வைத்திருந்த கசங்கிய காகிதத்தை பயந்து அக்கம் பக்கம் பார்த்து விட்டு, இவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கீழே நழுவ விட இவன் அதை எடுத்து வந்தான். ரஞ்ஜித் படித்து முடித்து அவளிடம் சைகை மொழியில் பேசக் கிளம்ப அந்தக் கசங்கிய காகிதம் பறிக்கப்பட்டு எங்களிடம் வந்து சேர்ந்தது.


கடிதம் தமிழில் எழுதப்பட்டிருந்தது.  கடிதத்தின் தொடக்கமே "அன்புள்ள கணவனுக்கு" என்று இருந்தது. பின்பு கடிதத்தில் உங்கள் ஊர் என்ன, உங்களுக்கு எந்தக் கலர் பிடிக்கும், என்ன ஜாதி என்று கேட்டு சில ஜாதிகளின் பெயர்களையும் குறிப்பிட்டு, இவைகளில் எதாவதா ?, எங்கு வேலை செய்கிறிர்கள் போன்ற பல கேள்விகள். கடைசியில் முத்தாய்ப்பாக கடிதத்தை முடிக்கும் போது பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் மனைவி என்று இருந்ததை பார்த்து சிரித்துக் கொண்டோம்.


சினிமா என்னும் கவர்ச்சியான பொய் உலகம் ஒரு சிறு பெண்ணின் மனதுக்குள் புகுந்து எப்படி எல்லாம் ஆட்டிப் படைத்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க முடிந்தது.

பின்னர் இரண்டொரு நாளில் அவள் பள்ளி இருக்கும் ராயப்பேட்டை ஐஸ் கவுஸ் பகுதிக்கு சென்று அவளைப் பார்ததாகவும், நான்கைந்து முறை சினிமாவிற்க்கு அழைத்துச் சென்று முத்தங்களை பரிமாறிக்கொண்டதாகவும் கூறினான்.


ஆனால் இந்தத் தொடர்பு அதிக நாட்கள் நீடிக்கவில்லை. வேலை இல்லாமல் இருந்த எட்வர்ட் வாடகை கொடுக்கப் பணமில்லாத சுழலில் திடிரென்று ஒரு நாள் ரஞ்ஜித்தும், எட்வர்டும் மேன்சனை விட்டு ஒடிப்போனார்கள்.

காணாத அவனை தேடி சில நாள்களாக அவள் கண்களால் அலைந்து பின்னர் சிறிதொரு நாள்களில் பார்ப்பதை நிறுத்திக்கொண்டாள். அக்கா திருமணமாகி சென்று விட அன்று முதல் இன்று வரை அவள் மட்டும் தனியாக தண்ணிர் பிடிக்க வந்து செல்கிறாள். ஆனால் மறந்தும் இன்று மேன்சன் இருக்கும் பகுதியை அவள் பார்ப்பதே இல்லை.

(அடுத்து வரும் பதிவுகளில் இன்னுமொரு கண்றாவிக் காதலுடன்... )