Friday, October 31, 2014

காவலன்


அலுவலகம் சென்று வர pickup, drop கள் பெரும்பாலும் Call center/BPO எனப்படும் ITES களில் மட்டுமே உண்டு. முன்பெல்லாம் Cab-களில்  security guards கிடையாது.  Cab-இல் பெண்கள் கடைசியாக இறங்க வேண்டி இருந்தாலும் அவர்களுக்கென்று தனி பாதுகாப்பு எல்லாம் முன்பு இல்லை. பெரும்பாலும் பெண் பணியாளர்களுக்கு Home drop தான்.  சிறிய தெருவாக இருந்து இருட்டில் கொஞ்ச தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தால் கொஞ்சம் கஷ்டம். ஒரு சில‌ பொறுப்புள்ள cab driver-கள் மட்டும் வண்டியின் ஹெட் லயிட்டை தெருவுக்குள் பாய்ச்சி அவர் வீடு சென்று சேரும் வரையோ  இல்லை அப்பெண் "போகலாம்" என்று சைகை காட்டும் வரையோ காத்திருப்பர். ஆனால் பலர் இதை  செய்வதில்லை.

Drop நள்ளிரவு ஒரு மணி அல்லது அதிகாலை மூன்று நான்கு மணியாகத்தான் இருக்கும் ஆதலால், சில நேரங்களில் அரிதாக எங்களில் யாரேனும் அப்பெண் வீடு வரை சென்று விட்டு வருவதுண்டு..  2005ல்  பெங்களூர் call center பெண், cab driver ஆல் கொலை செய்யப்பட்ட பிறகு நிலைமை மாறி... கூட வரும் சக ஆண் பணியாளர் அவரை இறக்கிவிட்டு கடைசியாக இறங்க வேண்டியதாக மாறியது.  சில வருடங்களாக தொடர்ந்த இந்த ஏற்பாடு பின்னர் 2013ம் வருடம் நடந்த டெல்லி சம்பவத்திற்கு பிறகு மாறி... பெண்கள் கடைசியாக இறங்க வேண்டியிருந்தால் அந்த வண்டிக்கென்று மட்டும் ஒரு security escort அனுப்பப்பட்டார்.

சென்னை TCS பெண் கொலை சம்பவத்திற்கு பிறகு இதுவும்  மாறியது. வண்டியில் பெண் பணியாளர்கள் இருந்தாலே ஒரு security escort ஏற்றப்படுகிறார். கெட்டதிலும் ஒரு நன்மை என்று பார்த்தால்,  இதற்கென்றே ஒரு துறை உருவாகி ஆயிரக்கணக்கானவர்களுக்கு  வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததுதான். இரவுப் பணி. பத்தாயிரம் ரூபாய் வரை  சம்பளம். இதில் முன்பு வடஇந்தியர்களே அதிகமாக இருந்தனர். இப்பொழுது அவர்களோடு சென்னையை தவிர்த்த பிற தமிழக ஊர் பகுதியை சேர்ந்தவர்களும் அதிகளவில் வருகின்றனர்.  நகரத்தில் security சம்பந்தப்பட்ட‌ ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா என்று அலைந்து திரியும் இதுபோன்ற‌ என்னற்ற பேர்களுக்கு இப்பொழுது இத்துறை ஒரு சிறிய ஆறுதல். அலுவலக reception-ல் கையில் Resume-களோடு தினமும் வந்து குவியும் என்னற்ற‌ பேர்களே இதற்க்கு சாட்சி.